வரும் 5ஆம் தேதி பெங்களூருவில் நடக்கிறது
பெங்களூரு, ஜன.24 யுஜிசி விதிமுறைகள் 2025 குறித்து விவாதிக்க அனைத்து மாநில உயர்கல்வித்துறை அமைச் சர்களின் மாநாடு பிப்ரவரி 5ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று கருநாடக அமைச்சர் எம்.சி.சுதாகர் நேற்று (23.1.2025) தெரிவித்தார். மாநாட்டில், தேசிய கல்விக் கொள்கை 2020 ஆவணத்தின் அடிப் படையில் உயர்கல்வி நிறுவனங்களின் தரப்படுத் தல் (HEI) குறித்தும் விவா திக்கப்படும் என்றார்.
அழைப்பு
அமைச்சர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநாட்டில் பங்கேற்க அனைத்து மாநில உயர்கல்வித்துறை அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. யுஜிசி வரைவு விதி முறைகள் நாட்டின் உயர்கல்வி முறைக்கு கடும் பின்னடைவு என்றும் “இதுவரை மாநிலங்கள் சட்டப்பூர்வமாக வைத் திருந்த அதிகாரத்தை கடுமையாகக் குறைக்கிறது மற்றும் உயர்கல்வியில் மாநிலங்களின் அரச மைப்பு கடமைகள் மற்றும் பொறுப்புகளைத் தடுக்கிறது,” என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும் ஒப்பந்த ஊழியர்களின் உச்சவரம்பு நீக்கம், பதவி உயர்வுக்கு பிஎச்டி கட்டாயம் என ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித் ததால், வரைவு யுஜிசி விதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகளின் படி, துணைவேந்தர்களை நியமிப்பது மற்றும் தேடல் குழுவை அமைக்கும் அதிகாரம் முழுவதுமாக ஆளுநர்களுக்கு வழங்கப் பட்டுள்ளதாகவும், மாநில அரசுகள் இந்த நடவடிக்கையில் இருந்து முற்றிலும் விலக்கப் பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் மற்றும் சில என்.டி.ஏ. பங்காளிகள் ஏற்கனவே இந்த விதிமுறைகள் குறித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன, வரைவு விதிமுறைகளின் நன்மை தீமைகள் குறித்து விவாதிக்கவும் பொதுவான நிலைப்பாட்டை எடுக்கவும் மாநாடு கூட்டப்படுகிறது.
“மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் யுஜிசி தனது விதிமுறை களை திணிக்கும் இந்த நடவடிக்கை கூட் டாட்சி ஏற்பாட்டில் பொருத்தமற்றது, கூட் டாட்சி நெறிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்து கிறது, மேலும் இது திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.