பாட்னா, ஜன. 24- பீகாரை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்)கட்சி தலைவராக உள்ளார்.
இவரது கட்சிக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஜிதன் ராம் அக்கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப் பினர் ஆவார். பீகாரில் இந்தாண்டு இறுதியில் பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில்,முங்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜிதன்ராம் கலந்து கொண்டு பேசுகை யில்,‘‘ஜார்க்கண்ட், டில்லி சட்டப் பேரவை தேர்தல்களில் எச்ஏஎம் கட்சிக்கு தேஜ கூட்டணியில் சீட் ஒதுக்கவில்லை. நான் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
இது தான் நியாயமா? அந்த மாநிலங்களில் எங்கள் கட்சிக்கு பலம் இல்லை என்று கூறுகின்றனர். இதற்காக என்னுடைய அமைச்சர் பதவியிலிருந்து விலகுகி றேன். பீகாரில் எங்கள் பலத்தை நிரூபிப்போம். தேஜ கூட்டணிக்குள் நான் மோதலில் ஈடு பட்டு வருவதாக தெரி விக்கின்றனர். ஆனால் மோடி தலைமையிலான தேஜ கூட்டணியில் போர்க்கொடி தூக்குவது என்ற கேள்விக்கே இட மில்லை. இந்த விஷயம் குறித்து கோரிக்கை தான் விடுக்கிறேன். இதில் மோதல் எதுவும் இல்லை. பீகார் முல மைச்சர் நிதிஷ்குமார் அரசு பல்வேறு நல்ல விடயங்களை செய்துள்ளது. ஆனால், தாழ்த்தப்பட்ட பிரிவின ருக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட வில்லை’’ என்றார்.