பெரியார் பெருந்தொண்டர் க.சுப்பையன் படத்திறப்பு – நினைவேந்தல்

Viduthalai
1 Min Read

புதுப்பட்டினம், ஜன. 24- மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த 15-01-2025 அன்று இயற்கை எய்திய பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் க. சுப்பையனின் படத் திறப்பு விழா 21-01-2025 அன்று அவர் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை வகித்தார். நட. சோதிவேல் வரவேற்புரை யாற்றினார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர். துரை. சந்திரசேகரன் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரையில் மறைந்த சுப்பையன் இளமை முதல் தந்தை பெரியாரின் கொள்கைகளைச் சார்ந்து வாழ்ந்தவர் என்பதையும் தனது தலைமையில் அவர் மகன்களுக்கு சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்தவர் என்றும் மகன்களுக்கு உயர் கல்வி யினை அளித்து பெரிய பதவிகளில் இருக்கச் செய்து தாம் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து இறுதி வரை பகுத்தறிவுக் கொள்கையில் மாறாதிருந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

தி.மு.க.வைச் சேர்ந்த கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயப்பிரகாஷ் கழக பேச்சாளர்கள் யாழ். திலீபன், வடலுார் புலவர் ராவணன், மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் கொக்கூர் இள மாறன், கொள்ளிடம் ஒன்றிிய கழக தலைவர் பாண்டியன் சீர்காழி ஒன்றியத் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் செல்வம் ஆகியோர் மறைந்த ஆசிரியர் சுப்பையன் குறித்து பேசினர்.
இந்நிகழ்வில் அவரது துணைவியார் பத்மாவதி மகன் திருமாவளவன் மருமகள் சாந்தி, மகன் இளந்திரையன், மருமகள் தேவி, மகன் இங்கர்சால், மருமகள் ஷிக்கா ஆகியோரோடு உறவினர்களும் கலந்து கொண்டனர். மருமகள் ஷிக்கா இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர். எளிமையாகவும் எவ்வித மத சடங்குகளும் இல்லாமல் நடந்த படத்திறப்பினைக் கண்டு வியந்தவர் இதுபோன்ற நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை என்றதோடு பகுத்தறிவோடு நிகழ்ந்த இதனை தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்வேன் என்பதை உணர்ச்சி மேலிடக் கூறினார்.
இறுதியாக நெய்வேலி தன. சாம்பசிவம் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *