ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Viduthalai
1 Min Read

 அய்ரோப்பிய நாடாளுமன்றம் மணிப்பூர் குறித்து விவாதிக்கிறது 

ஆனால் பிரதமர் மோடியோ ஒரு வார்த்தை அது 

குறித்து பேசுவதில்லை: இதற்குப் பெயர்தான் மோடி

புதுடில்லி, ஜூலை 17- இந்தியா வின் வடகிழக்கு மாநில மான மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே கடந்த மே மாதம் தொடங் கிய மோதல், கலவரமாக மாறியது. இதில் 135-க்கும் மேற்பட்டோர் பலியா னார்கள். ஆயிரக்கணக் கான கடைகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.

இவ்விவகாரம் குறித்து அய்ரோப்பிய நாடாளுமன்றம், தீர்மா னம் ஒன்றை நிறைவேற்றி யது. மேலும், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான உரிமை குறித்து விவாதம் நடத்தப்பட் டது.அதற்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்தது. இந்தியா வின் உள்விவகாரங்களில் இதுபோன்ற அந்நிய நாட்டின் தலையீடுகளை ஏற்க முடியாது என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார். 

இந்நிலையில், பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டு தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்றி ருந்தார். மேலும், பிரான்சு நாட்டில் இருந்து 26 ரபேல் போர் விமானங் கள் வாங்க ஒப்பந்தமும் கையெழுத்தானது. இது குறித்து காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி டுவிட் டரில் விமர்சனம் செய் துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத் தில் பதிவிட்டதில் கூறியிருப்பதாவது:-

மணிப்பூர் எரிகிறது. அய்ரோப்பிய ஒன்றியத் தின் நாடாளுமன்றம் இந்தியாவின் உள்விவகா ரம் பற்றி விவாதிக்கிறது. ஆனால் நமது பிரதமர் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காக்கிறார். ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து பிரான்சு தேசிய தின அணிவகுப்புக்கான டிக்கெட்டைப் பெற்று விட்டார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதுவரையில் மணிப்பூர் நிலைமை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *