தோழர் என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் – வாழ்த்துகள் முதலமைச்சருக்கு இரா.முத்தரசன் நன்றி…

1 Min Read

சென்னை, ஜூலை 17- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்தாவது,

மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து  வைத்த முதலமைச்சர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மூத்த தலைவர் தோழர்.என்.சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் மூலம் “மதிப்புறு டாக்டர்” பட்டம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். முன்னதாக,  தோழர். என்.சங்கரய்யாவுக்கு  தமிழ்நாடு அரசு உருவாக்கிய “தகைசால் தமிழர்” விருதுக்கு முதல் விருதாளராக தேர்வு செய்து, விருது வழங்கி சிறப்பு செய்தது. தொடர்ந்து மூத்த தலைவர் தோழர்.இரா.நல்ல கண்ணு அவர்களுக்கு தகைசால் விருது வழங்கி பெருமைப் படுத்தியது .

நாட்டுக்கும், மக்களின் நலனுக்கும் பாடுபட்ட மூத்த தலை வர்களை பெருமைப்படுத்தி, அவர்களது நல்லியல்பு களை இளைய தலைமுறை அறிந்து கொள்ள ஊக்கப்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு நன்றி தெரிவிப்பதுடன், 102ஆ வது பிறந்த நாளில் மதிப்புறு டாக்டர் பட்டம் பெறும் தோழர். என்.சங்கரய்யா மேலும் பல்லாண்டு நலமுடன் வாழ் வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. 

– இவ்வாறு இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *