மராட்டிய மாநிலத்தில் விரைவு ரயிலில் அடிபட்டு 12 பேர் உயிரிழப்பு!

1 Min Read

புனே, ஜன.23 மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் புஷ்பக் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக அஞ்சி பயணிகள் சிலர் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரயில் நின்றது. தொடர்ந்து புஷ்பக் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தியை நம்பி சில பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி ஓடியுள்ளனர்.

அவர்கள் தண்டவாளத்தைக் கடந்தபோது மறுபுறம் வந்த கருநாடக விரைவு ரயில் பயணிகள் மீது மோதியதில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. விபத்தை அடுத்து மீட்பு பணிகளை ரயில்வே அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்தநிலையில், உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *