கோா்பா, ஜன.23 சத்தீஸ்கரில் 16 வயது பழங்குடியின சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதோடு, அச்சிறுமியின் குடும்பத்தினா் இருவரையும் கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சத்தீஸ்கர் மாநிலம் கோா்பா மாவட்டத்தில் உள்ள கதுபரோடா கிராமத்தில் சாந்தாராம் மஜ்வாா் (வயது 49) என்பவா் தனது கால்நடைகளை மேய்க்க சிறுமியின் குடும்பத்தை பணியமா்த்தியிருந்தாா். சாந்தாராமுக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியை வற்புறுத்தி வந்துள்ளாா். அதற்கு சிறுமியும் அவரது குடும்பத்தினரும் மறுத்துள்ளனா்.
சிறுமி படுகொலை
இதனால் ஆத்திரமடைந்த சாந்தாராம், கடந்த 2021, ஜனவரி 29-ஆம் தேதி தனது கூட்டாளிகள் 5 பேருடன் சென்று சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். பின்னா், கல்லால் தாக்கி சிறுமியை படுகொலை செய்த அவா்கள், உடலை காட்டுப்பகுதியில் வீசினா். மேலும் சிறுமியுடன் இருந்த தந்தை (வயது 60) மற்றும் அவரது 4 வயது பேத்தியையும் கொலை செய்துள்ளனா். இது தொடா்பாக சிறுமியின் சகோதரா் அளித்த புகாரின் அடிப்படையில் சாந்தாம்ராம் உள்பட 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
மரண தண்டனை
கோா்பாவில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த இவ்வழக்கில் நீதிபதி மம்தா போஜ்வானி சில நாள்களுக்கு முன் தீா்ப்பளித்தாா்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை), 376 (2) (ஜி) (கூட்டு பாலியல் வன்கொடுமை) உள்ளிட்ட பிரிவுகள், பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) ஆகியவற்றின்கீழ் சாந்தாராம், அப்துல் ஜாபா் (வயது 34), அனில் குமாா் சாரதி (வயது 24), பா்தேஷி ராம் (வயது 24), ஆனந்த் ராம் பனிகா (29) ஆகிய 5 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி, அவா்களுக்கு மரண தண்டனை விதித்தாா். மற்றொரு குற்றவாளியான உமாசங்கருக்கு (வயது 26) ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
‘குற்றவாளிகளின் செயல் கொடூரமானது; மனிதத்தன்மையற்றது. தங்களது ஆசையைத் தீா்த்துக் கொள்ள 3 அப்பாவிகளை கொலை செய்துள்ளனா். இச்சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. எனவே, 5 பேருக்கும் மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு வாய்ப்பு கிடையாது’ என்று தீா்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.
தேர்தல் பத்திரங்கள் மூலம்
அரசியல் கட்சிகள் பெற்ற ரூ.16 ஆயிரம் கோடியை பறிமுதல் செய்ய வேண்டும்
உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு
புதுடில்லி, ஜன.23 அரசியல் கட்சிகளுக்கு பொதுமக்களும், தொழில் அதிபர் களும் நன்கொடை அளிப்பதற்காக, கடந்த 2018-ஆம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. ஆனால், அதில் நன்கொடை அளிப்பவர் பெயரை தெரி விக்க வேண்டியது இல்லை என்பதால் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று கூறி, அத்திட்டத்தைரத்து செய்ய வேண் டும் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப் புகள் உச்சநீதிமன்றத்தில்மனுக்கள் தாக்கல் செய்தன.
அதையடுத்து, தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.
மனு தாக்கல்
அதன் அடிப்படையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசி யல் கட்சிகள் பெற்ற ரூ.16 ஆயிரத்து 518 கோடி நன்கொடையை பறிமுதல் செய்ய உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் கேம் சிங் பட்டி உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்டு 2-ஆம் தேதி அந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், கேம் சிங் பட்டி, உச்சநீதிமண்றத்தில் மறுஆய்வு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி, தேர்தல் பத்திர திட்டத்தை செல்லாது என்று உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அப்படியானால், அந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே செல்லாததாகி விடுகிறது.
பறிமுதல்
அத்தகைய சூழ்நிலையில், அத்திட்டத்தின்கீழ் பெற்ற நன் கொடைகளை பறிமுதல் செய்திருக்க வேண்டும். அப்படி பறிமுதல் செய்யுமாறு கோரிய மனுக்களை தள்ளுபடி செய் திருக்கக்கூடாது. ஆகவே, அந்த மனுக்களை தள்ளுபடி செய்த கடந்த ஆண்டு ஆகஸ்டு 2-ஆம் தேதி உத்தரவை உச்சநீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும். அந்த உத்தரவை திரும்பப்பெற்று, புதிதாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.