வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் நிலைக்குழு கூட்டத்தில் கோரிக்கை

1 Min Read

புதுடில்லி, ஜன.23- நாடாளுமன்றத்தில் வெளி நாடு வாழ் இந்தியர்க ளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கூட் டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

காங்கிரஸ் எம்.பி., கோரிக்கை

வெளியுறவு விவகா ரம் தொடர்பாக காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மேனாள் ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான சசிதரூர் தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட் டுள்ளது.அக்குழுவின் கூட்டம் 21.1.2025 அன்று நடந்தது. டில்லி, குஜராத், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநி லங்களை சேர்ந்த 4 வெளி நாட்டுவாழ் இந்தியர் அமைப்புகள் கலந்து கொண்டன.

கூட்டத்தில், காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர் தீபேந்தர் சிங் ஹூடா, “இத்தாலி போன்ற நாடுகளின் நாடாளு மன்றங்களில் வெளி நாடுகளில் வசிக்கும் அந்நாட்டு குடிமக்களுக்கு பிரதிநிதித் துவம் அளிக்கப்படுகிறது அதே போல் இந்திய நாடாளுமன்றத்தில் வெளி நாடு வாழ் இந்தியர் களுக்கு பிரதிநித்துவம் அளிக்கப்படவேண்டும் அதன் மூலம் தங்கள் பிரச்சினைகளை சிறப்பாக எடுத்துவைப்பார்கள் என்று கூறினார்

சசிதரூர் பேட்டி

கேரளாவை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் அமைப்பு, வெளிநாடுகள் எதிர்பார்க்கும் திறன்களை இந்திய அமைப்புகள் கற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்தால், திற மையான தொழிலாளர் களின் குடியேற்றம் எளிதாகும் என்றும், சட்டவிரோதமாக வெளி நாட்டுக்கு செல்லும் முயற்சிகள் கட்டுப்படுத்தப் படும் என்றும் தெரிவித்தது.

கூட்டம் முடிவடைந்த பிறகு, சசிதரூர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது

வெளிநாடுவாழ் இந்தியர்களின் எண்ணற்ற பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு விவாதித்தது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் குடியேற்றப் பிரச்சினை குறித்த மசோதா ஒன்றிய அரசின் பரிசீலனையில் இருப்பதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச் சரகம் தெரிவித்துள்ளது. என்று அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *