பெலகாவி, ஜன.23 ‘‘காந்தியார் ராம பக்தர். அவரை பா.ஜ., குடும்பத்தைச் சேர்ந்த கோட்சே படுகொலை செய்தார். நாங்கள் காந்தியாரின் ஹிந்துத்வாவை நம்புகிறோம். ஆனால், பா.ஜ., குடும் பம் கொலைகார கோட்சேயின் சித்தாந்தத்தை பின்பற்றுகிறது,” என, கருநாடக முதலமைச்சர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
கருநாடக மாநிலம், பெல காவியில், 1924இல் நடந்த காங் கிரஸ் மாநாட்டில், கட்சியின் தலைவராக காந்தியார் தேர்வு செய்யப்பட்டார். அதன் 100 ஆண்டு நிறைவை ஒட்டி, பெல காவியில் 21.1.2025 அன்று காங்கிரஸ் மாநாடு நடந்தது. பெலகாவி சுவர்ண விதான் சவுதா அருகே காந்தியார் சிலை திறக்கப்பட்டது.
கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், வயநாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பின ருமான பிரியங்கா, பொதுச் செயலர் வேணுகோபால், முதல மைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார், அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் முதலமைச்சர் சித்தராமையா பேசியதாவது: இன்று நம் முன் இருக்கும் பெரிய சவால்கள் பா.ஜ.,வும் – ஆர்.எஸ்.எஸ்.,சும் தான். இவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.,சின் கைக்கூலியாக பா.ஜ., வேலை செய்கிறது.
காந்தியார் ராம பக்தர்; காந்தியாரை பா.ஜ., குடும்பத்தைச் சேர்ந்த கோட்சே படுகொலை செய்தார். நாங்கள் காந்தியாரின் ஹிந்துத்வாவை நம்புகிறோம்.
ஆனால், பா.ஜ., குடும்பம் கொலைகார கோட்சே யின் சித்தாந்தத்தை பின்பற்று கிறது. காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ‘ஹே ராம்’ என்றபடியே இறந்தார். ஹிந்து – முஸ்லிம்கள் சகோதரர்களாக வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பம். இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே பேசுகையில்: ”காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேயை, பிரதமர் மோடி வணங்குகிறார். பா.ஜ., – ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்ட பெண் பிரியங்கா. அவர் பார்ப்பதற்கு மென்மையாக இருக்கலாம். அப்பா இல்லாமல் வளர்ந்தாலும் அந்த குறையை வெளிக்காட்டாமல் வளர்ந்தவர். யாருக்கும் அஞ்சாதவர்,” என்றார்.
காங்., பொதுச்செயலர் பிரியங்கா பேசும்போது: ‘‘அரச மைப்புச் சட்டத்தை பாதுகாக்க, தன் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக ராகுல் கூறி உள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தை மாற்றும் முயற்சிக்கு எதிராக, மக்களவையில் ராகுல் குரல் எழுப்பும்போது, அவருக்கு பயந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் இடையூறு ஏற் படுத்துகின்றனர். ராகுல் மீது பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
”உண்மையை பேச விடாமல் தடுக்கப் பார்க்கின்றனர். நாங்கள் பா.ஜ., – ஆர்.எஸ்.எஸ்., போன்று கோழைகள் இல்லை. தியாகிகளாக உயிர் தியாகம் செய்ய தயார். நான்கு சுவர்களுக்குள் இருந்து மன்னிப்புக் கடிதம் எழுத மாட்டோம்,” என்றார்.