அறிவியல் வினோதம்: அசாமில் நூதன அரிசி அடுப்பு இல்லாமல் சோறு சமைக்கலாம்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன.21 அசாம் அரிசியை பயன்படுத்தி அடுப்பு இல்லாமல் வெறும் 15 நிமிடத்தில் இனி சோறாக்கி சாப்பிடலாம். தினந்தோறும் இணைய தளத்தில் ஆர்டர் செய்து சாப்பிடுவோருக்கு இது பயன் தரும் விதமாக அமைந்துள்ளது.

நூதன அரிசி

இந்தியாவின் மிக முக்கியமான உணவு அரிசி. குறிப்பாக, தென் னிந்தியாவில் இதன் பயன் பாடு அதிகம். ஆனால், இதனை சமைத்து சாப்பிடுவதற்கு குக்கர், அடுப்பு, மட்டுமின்றி அதற்கான நேரமும் அதிகம். அசாம் மாநி லத்தில் விளையும் அகோ னிபோரா என்ற நூதன அரிசி. வழக்கத்துக்கு மாறாக நமது சோறாக்கும் நடைமுறையை முற்றிலும் புதுவிதமாக மாற்றியுள்ளது. இதற்கு அடுப்பு, குக்கர் என எதுவும் தேவையில்லை.

சமைப்பது எப்படி?

அகோனிபோரா என்பது புழங்கல் அரிசி வகையைச் சேர்ந்தது. இதனை சமைக்க வேண் டிய அவசியம் இல்லை.
குளிர்ந்த நீராக இருந்தால் இந்த அரிசியை 45 நிமிடங்கள் ஊற வைத்தால் சோறு ரெடி. அதேபோன்று வெந்நீரில் ஊற வைத்தால் 15-20 நிமிடங்களில் இலையை போட்டு சாப்பாட்டுக்கு ரெடியாகி விடலாம். அடுப்பு, விறகு, தீ, காஸ், மின்சாரம் என எதுவும் இதற்கு தேவைப்படாது.

இந்த நூதன அரிசி மேற்கு அசாம் பகுதிகளில் அதிகம் விளைகிறது. போரா சால் எனும் ஒட்டும் அரிசி குடும்ப வகையைச் சேர்ந்தது. அதிக புரதச் சத்துகள் நிறைந்தது. 4-5 மாதங்களில் விளையக்கூடியது.
அசாமின் டிடாபோர் அரிசி ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானிகளால் அகோனிபோரா அரிசி கடந்த 1992-ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *