குறிஞ்சிப்பாடி நகர கழக தலைவர் தா.கனகராஜ்- தமிழ்ஏந்தி இல்ல மணவிழா!

Viduthalai
1 Min Read

கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார்!

குறிஞ்சிப்பாடி, ஜன.21 குறிஞ்சிப்பாடி நகர கழகத் தலைவர் ஆடூர் அகரம் தா.கனகராஜ், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் தமிழ் ஏந்தி ஆகியோர் மகன் தமிழ் வேந்தனுக்கும், தம்பிக்கு நல்லான் பட்டினம் கலியபெருமாள், விஜயா ஆகியோரின் மகள் காயத்ரிக்கும் மணவிழா 19.1.2025 அன்று காலை 8 மணி அளவில் குறிஞ்சிப்பாடி அருள் செந்தில் திருமண மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
தோழர் தா.கனகராசு வர வேற்புரை ஆற்றினார்.

கழக நிர்வாகிகள் சொ.தண்டபாணி, கழகப் பேச்சாளர் புலவர் ராவணன், மாவட்ட கழக செயலாளர் எழில் ஏந்தி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட துணைத் தலைவர் மணிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வேலு, கடலூர் மாநகர தலைவர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், பெரியார் வீர விளை யாட்டுக் கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பெரியார் செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் இராமநாதன், வடலூர் கழக அமைப்பாளர் முருகன் மற்றும் கழகத் தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
ஏராளமான கழகத் தோழர்க ளும், உறவினர்களும், நண்பர்களும் மணவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக க.த.திராவிட பொன்னி நன்றி கூறினார்.
தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தும் துரோகி களின் முகத்திரை கிழிக்கப்பட்ட பிரச்சார வாய்ப்பாக இம்மண விழா அமைந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *