மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம் ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

2 Min Read

தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

சென்னை, ஜன. 21- நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு பல்வேறு கண்டனங்களை செயலாளருக்கு எதிராக பதிவு செய்தது.

நடவடிக்கை

இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நெல்லை மாவட்டத்தில் 2 கிராமங்களில் 6 இடங்களில் கொட்டப் பட்ட அனைத்து கழிவு களும் அப்புறப்படுத்த பட்டுவிட்டதாக தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக புற்றுநோய் மருத்துவமனை, ஓட்டல் மீது நடவடிக்கை எடுத்துள்ள கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கழிவுகளை சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள் வியை முன் வைத்தனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

தமிழ்நாடு

தொடர்ந்து, தமிழ் நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு பெற்றுதர வேண்டும் என வலியுறுத்தினார். இழப்பீட்டை வசூல் செய்ய கேரளா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தொடர்ச்சியாக தாக்கீது மட்டுமே அனுப்பி வருவ தாகவும் கேரளா அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தமிழ்நாட்டில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர் பாக இது 3ஆவது வழக்கு. ஒன்றிய மாசுகட்டுப்பாட்டு வாரியம் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இது தொடர் பாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் இழப்பீடு பெற்று தருவதற்கு கேரளா அரசு எடுத்துள்ள நட வடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரளா அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தர விட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *