உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுகிறது அமெரிக்கா!

Viduthalai
1 Min Read

வாசிங்டன், ஜன.21 உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெ க்கா விலகுவதற்கான உத்தரவில் அந்நாட்டின் புதிய அதிபராக 2 ஆவது முறையாக மீண்டும் பதவி யேற்றுக்கொண்ட பின் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்துக்கு 2024-2025 ஆம் நிதி யாண்டின் பட்ஜெட்டில் அமெரிக்காவின் நிதி பங்களிப்பாக 662 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது அந்நிறுவனம் பெறும் மொத்த வருவாயில் 19 சதவிகிதமாகும்.
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகவிருக்கும் உத்தரவில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதால், பன்னாட்ட ளவில் பல்வேறு நோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *