பெங்களூருவில் நடைபெறும் மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று (17.7.2023) பெங்களூரு சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில், கருநாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் சால்வை அணிவித்து மலர்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் கருநாடக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உள்ளனர்.