வெள்ளை டி-சர்ட் இயக்கம் தொடங்கினார் ராகுல் காந்தி

1 Min Read

புதுடில்லி, ஜன.20 நாட்டில் நிலவும் சமத்துவமின்மைக்கு எதிராக போராடும் வகையில் ‘வெள்ளை டி-சர்ட் இயக்கம்’ தொடங்கப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இன்று, மோடி அரசாங்கம் ஏழைகளையும் தொழிலாள வர்க்கத்தையும் புறக்கணித்து, அவர்களை முழுமையாக கைவிட்டுள்ளது. அரசாங்கத்தின் முழு கவனமும் குறிப்பிட்ட சில முதலாளிகளை வளப்படுத்துவதில் மட்டுமே உள்ளது.
இதனால், சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், தங்கள் ரத்தத்தாலும் வியர்வையாலும் நாட்டை வளப்படுத்தும் தொழிலாளர்களின் நிலை மோசமாகி வருகிறது. அவர்கள் பல்வேறு வகையான அநீதிகளையும், கொடுமைகளையும் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு நீதியையும், உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க ஒன்றுபட்டு வலுவாக குரல் எழுப்ப வேண்டியது நம் அனைவரின் பொறுப் பாகும். இந்த சிந்தனையுடன் ‘வெள்ளைச் டி-சர்ட்’ இயக்கத்தை தொடங்குகிறோம். இந்த இயக்கத் தில் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்க சகாக்களுக்கு நான் வேண்டு கோள் விடுக்கிறேன்.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *