புதுடில்லி, ஜன. 19- சத்தீஸ்கரைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் இறந்த தனது தந்தையைப் புதைக்கமுடியா தது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சிண்டாவாடா கிராமத் தைச் சேர்ந்த ரமேஷ் பகேல் என்பவரின் தந்தை அண்மையில் உயிரிழந்தார். அவரது உடலை அந்த கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான இடுகாட்டில் புதைக்க அனுமதி கிடைக்க வில்லை. இதை எதிர்த்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ரமேஷ் பகேலின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. கிறிஸ்தவர்களுக்கு என்று தனியாக இடுகாடு ஏதுமில்லை என்று அந்தக் கிராமத் தலைவர் தாக்கல் செய்திருந்த பதில் மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து ரமேஷ் பகேல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவரது மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ்சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சத்தீஸ்கரில் உயிரிழந்த கிறிஸ்தவரின் உடல் அவர் உயிரிழந்த கடந்த 7ஆம் தேதியில் இருந்து ஜக்தால்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக் கப்பட்டுள்ளது தொடர்பாகவும், இந்த விவகாரத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததுதொடர் பாகவும் நீதிபதிகள் வியப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில் ‘கிராமப் பஞ்சாயத்தை விடுங்கள். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றமும் விசித்திரமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?’ என்று கேள்வி எழுப்பி சத்தீஸ்கர் அரசுக்கு கண் டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் எடுக்கப் பட்ட நடவடிக்கை தொடர்பாக பதில் மனு தாக் கல் செய்யுமாறு சத்தீஸ்கர் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.