ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசமைப்பு மீது தாக்குதல் நடத்து வதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பாட்னாவில் பேசிய அவர், அரசமைப்பு உருவாக்கப்பட்ட போது, நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற மோகன் பகவத் பேச்சை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். பீகாரில் நடத்தப்பட்டதை போல், போலி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், இந்தியா முழுவதும் முறையான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.