ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிஜு ஜனதா தளமும் வலியுறுத்தல்

1 Min Read

புவனேஸ்வர், ஜன.18 ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குழு, ஓபிசி நலனுக்கான நாடாளுமன்ற குழு தலைவர் கணேஷ் சிங்கை சந்தித்தது.

இந்த சந்திப்பின் பொழுது கணேஷ் சிங்கிடம் நவீன் பட்நாயக், “2011ஆம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட சமூக பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் கிராம மற்றும் நக ரங்களில் வாழும் குடும்பங்களின் சமூக பொருளாதார நிலைமையை கண்ட றிந்தோம். ஆனால் தற்போது எதையும் கண்டறிய முடியாது. காரணம் வளங் களை சரிசமமாக பிரித்து திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான ஜாதி அடிப்படையிலான தரவுகள் இல்லை.

ஜாதிய ரீதியிலான தரவுகள் மூலம் குடும்பத் தின் நிலை, வருமானத்திற்கான ஆதாரம், கல்வித் தகுதி மற்றும் வேலை ஆகிய வற்றை அறிய முடியும். ஒடிசா மாநி லத்தில் சமூக மற்றும் கல்வியில் பின்தங் கிய வகுப்புகளை தேசிய அளவிலான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அட்ட வணையில் இணைக்க வேண்டும். இதன் மூலம் வரலாற்று ரீதியாக சமூக, பொரு ளாதாரத் தளத்தில் பின்தங்கிய நிலை யில் உள்ள ஜாதிகள் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *