மோடி அரசுடன் ஒருபோதும் பணிந்து போகமாட்டேன் “கோடி மீடியா” ஊடகங்களுக்கு உமர் அப்துல்லா பதிலடி

viduthalai
1 Min Read

சிறீநகர், ஜன.18 கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரின் சோன்மார்க் பகுதியில் பிரதமர் மோடி சுரங்கப் பாதையை திறந்து வைத்தார். மோடி ஒரு பிரதமர் என்ற அடிப்படையில் அவருக்கான மரியாதையை அளித்தது மட்டுமல்லாமல் அர சியலற்ற பொது மேடை என்ற நடை முறையின்படி பிரத மர் மோடியை விமர்சி க்காமல் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா சாந்தமாக பேசினார்.

உடனே “கோடி மீடியா” ஊடகங்கள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரின் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி பாஜக உடன் கூட்டணி வைத்துக்கொள்ள முயன்று வருவதாகவும், ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணி எப்பொழுது வேண்டுமானா லும் உடையலாம் என செய்திகளை வெளியிட்டது.

இந்நிலையில், மோடி அரசுடன் ஒரு போதும் மென்மையான போக்கினை கடைப்பிடிக்க மாட்டேன் என ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா “கோடி மீடியா” ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் தள்ளுமுள்ளு என்பது தவிர்க்க முடியா மல் நிகழும். அது போல தான் சில விடயங்களும். காலப்போக்கில் என்ன நடக்கிறது என்று தொடர்ந்து பார்க்கலாம். ஆனால் அந்தச் சூழல் இன்னும் ஏற்பட வில்லை. இது பிரச்சினை இல்லை. நான் ஒன்றிய அரசுடன் மென்மை யான போக்கினை கடைப்பிடிக்க வில்லை. தயவுசெய்து புரிந்துகொள்ளுங் கள். ஒன்றிய அரசுடன் இணைந்து பணி யாற்றுவது அவர்கள்செய்வதை, பாஜக செய்யும் அத்தனை யையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தமில்லை. ஜம்மு-காஷ்மீர் முன்னேற வேண்டும், வளர்ச்சி ஏற்படவேண்டும், மாநில தகுதி மீட்கப்பட வேண்டும் என்பதை நிரூபிக்க, மோதல் போக்குக்கு அவசியம் இல்லாத இடத்தில் நான் அதனை கடைப்பிடிக்க வேண்டுமா?” என “கோடி மீடியா” ஊடகங்களுக்கு கேள்வி எழுப்பினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *