வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நவ. 25, 26ஆம் தேதிகளுக்கு மாற்றம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு

சென்னை,நவ.15- தமிழ்நாடு அர சால் வரும் நவ.18ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நவ. 18, 19-க்கு பதில் 25 மற்றும் 26 தேதிகளில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர் தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று முன் தினம் (13.11.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வரும் 2024 ஜன வரி 1ஆம் தேதியை தகுதியேற்படுத் தும் நாளாகக் கொண்டு, ஒளிப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் கடந்த அக். 27ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரு கின்றன. இதன் ஒரு பகுதியாக வாக் காளர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கவும், வாக்காளர் பட்டிய லில் திருத்தம் செய்யவும் வசதியாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் நவ 4, 5 மற்றும் 18,19 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. 

அதன்படி, நவ 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தமிழ்நாடு அரசால் நவ.18ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறப்பு முகாம் தேதி களை நவ.18, 19-க்கு பதில், நவம்பர் 25, 26 ஆகிய சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளுக்கு மாற்றிய மைத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *