வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நவ. 25, 26ஆம் தேதிகளுக்கு மாற்றம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

சென்னை,நவ.15- தமிழ்நாடு அர சால் வரும் நவ.18ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நவ. 18, 19-க்கு பதில் 25 மற்றும் 26 தேதிகளில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர் தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று முன் தினம் (13.11.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வரும் 2024 ஜன வரி 1ஆம் தேதியை தகுதியேற்படுத் தும் நாளாகக் கொண்டு, ஒளிப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் கடந்த அக். 27ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரு கின்றன. இதன் ஒரு பகுதியாக வாக் காளர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கவும், வாக்காளர் பட்டிய லில் திருத்தம் செய்யவும் வசதியாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் நவ 4, 5 மற்றும் 18,19 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. 

அதன்படி, நவ 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தமிழ்நாடு அரசால் நவ.18ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறப்பு முகாம் தேதி களை நவ.18, 19-க்கு பதில், நவம்பர் 25, 26 ஆகிய சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளுக்கு மாற்றிய மைத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *