ஒரே நாளில் ரூ.1,900 கோடி இழப்பு – அழுது புலம்பும் இன்ஃபோசிஸ்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களூரு, ஜன.18- இன்ஃபோசிஸ் நிறுவனம் நேற்று (17.1.2025) தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது, டிசம்பர் காலாண்டில் சிறப்பான லாபத்தையும், வருவாயும் பதிவு செய்தாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஈர்க்க தவறியுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 17) இன்போசிஸ் பங்கு விலை கடந்த கடுமையாக சரிவடைந்தது.

பாதிப்பு

இதனால் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் குடும்பமான நாராயணமூர்த்தி குடும்பத்தின் சொத்து மதிப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் பங்கு விலை கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிந்து ரூ.1,812.70 க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வீழ்ச்சியின் காரணமாக நாராயணமூர்த்தி குடும்பத்திற்கு சுமார் ரூ.1,900 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாராயணமூர்த்தி தி குடும்பம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மொத்தம் 4.02 சதவீதம் பங்குகளை வைத்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரா என்.ஆர்.நாராயணமூர்த்தி 0.40 சதவீதம் பங்குகளை வைத்துள்ளார். அவரது மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுதா மூர்த்தி 0.92 சதவீதம் பங்குகளையும், மகன் ரோகன் மூர்த்தி 1.62 சதவீதம் பங்குகளையும் வைத்துள்ளனர்.

வீழ்ச்சி

இதை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் மேனாள் பிரதமர் ரிஷி சுனக்-ன் மனைவியும், நாராயண மூர்த்தியின் மகளுமான அக்‌ஷதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தில் 1.04 சதவீதம் பங்குகளை வைத்துள்ளார். மேலும், நாராயண மூர்த்தி பேரன் எகாகிரஹ் ரோகன் மூர்த்தி 0.04 சதவீதம் பங்குகளை வைத்துள்ளார். இப்படி நாராயண மூர்த்தி-யின் குடும்பம் மொத்தமாக 4.02 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
நேற்றைய (17.1.2025) சந்தை வீழ்ச்சிக்கு முன்னர், நாராயண மூர்த்தி குடும்பத்தின் இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு ரூ.32,236 கோடியாக இருந்தது. ஆனால் பங்கு விலை 6 சதவீதம் வரையில் சரிவடைந்ததால், அவர்களது பங்குகளின் மதிப்பு ரூ.30,334 கோடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அவர்களின் மொத்த சொத்து மதிப்பில் 1900 கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *