மோசடிகளை தடுக்க அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்களை அழைக்க ‘1600xx’ எண் ரிசர்வ் வங்கி

1 Min Read

மும்பை, ஜன.18 நிதி மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் பரிவர்த்தனை நோக்கங்களுக்காக வாடிக்கையாளர்களை அழைக்க, ‘1600xx’ தொலைபேசி எண் தொடரை மட்டுமே பயன்படுத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் விளம்பர நோக்கங்களுக்காக, வங்கிகள் மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் செய்யப்படும் நிதி மோசடிகளைத் தடுக்க ‘140xx’ எண் தொடர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் மோசடிகளும் அதிகரித்துள்ளதால் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் பல வழிகளில் மொபைல் எண்ணை தவறாகப் பயன்படுத்தலாம். எனவே ‘1600xx’ எண்ணின் வரிசையைப் பயன்படுத்தி மட்டுமே பரிவர்த்தனை / சேவை அழைப்புகளை மேற்கொள்ள வேண்டும். ‘140xx’ எண் தொடர்களைப் பயன்படுத்தி மட்டுமே விளம்பர குரல் அழைப்பு, எஸ்எம்எஸ்களை அனுப்ப வேண்டும். இந்த நடவடிக்கைகளை மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளும் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின்
ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்து சிதறியது

இந்தியா

டெக்சாஸ், ஜன.18 ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் விண்கலம் நடுவானில் வெடித்துச் சிதறியது. அமெரிக்காவின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் தனியாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் ஸ்டார்ஷிப் விண்கலம் நேற்று முன்தினம் (16.1.2025) இரவு ஏவப்பட்டது. பயிற்சிக்காக இந்த விண்கலத்தில் 10 மாதிரி செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
திட்டமிடப்பட்டபடி விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலம் திடீரென தரைக்கட்டுப்பாட்டு மய்யத்துடனான தொடர்பை இழந்து சிறிது நேரத்தில் வெடித்து சிதறியது. இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி உள்ளன. ஸ்டார்ஷிப் விண்கலம் விண்ணில் பறக்கத்தொடங்கிய உடனேயே கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதுகுறித்து ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல்அதிகாரி எலான் மஸ்க் கூறுகையில்,’ வெற்றி என்பது நிச்சயமற்றது. ஆனால் பொழுதுபோக்கு உறுதி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *