அய்யாவின் கொள்கையைத் தாங்கிய ஆட்சி

viduthalai
4 Min Read

திராவிடத்தின் சீர்மிகு ஆட்சி தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்கி அய்யாவின் கொள்கைகளை தாங்கி, அய்யாவின் கருத்துகள் செயல்வடிவம் பெற்று சட்டங்களாக வெற்றி பெற்று வருகிறது. கல்வி, விவசாயம்,மருத்துவம், தொழில், விளையாட்டு, வணிகம் என்று அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.கேரளாவிலும் தந்தை பெரியாருக்கு நூலகம், நினைவிடம் என்று தமிழ்நாடு அரசு முனைப்போடு செயல்பட்டுவருகிறது.

மூக்குடைப்பு

நூல்கள், கைப்பேசி, ஊடகம், இணையம் என அனைத்திலும் பெரியார் பற்றிதான் கருத்துகள். மழலை குழந்தைகள் முதல் இளைய சமுதாயம் வரை தந்தை பெரியார் அவர்களைப்பற்றி படித்து கேட்டு அறிந்து வருகிறார்கள்.
உலகின் அனைத்து பகுதிகளிலும் தந்தை பெரியார் சிந்தனைகள் பரவி வெற்றிக் கொடி நாட்டிவருகிறது.
பொறுக்குமா பார்ப்பனக் கூட்டத்திற்கு, மதவெறிக் கூட்டங்களுக்கு, பெரும்பான்மை இல்லாத சிறு பான்மையினர் எதிர்ப்பு பாஜகவின் ஆட்சி தனது மூளையை பயன்படுத்தாமல் பிறரை வைத்து மூலை முடுக்கெல்லாம் தமது அதிகார ஏவலாளிகளை வைத்து தேவையற்றவைகளை பேசி அதற்கு வழியும் தெரியாமல் விடையும் தெரியாமல் மூக்குடைபட்டு வருகிறது ஒவ்வொரு செயல்களிலும்.

அதற்கு உதாரணம் தான் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அவர் சொல்லாத கருத்து வெறுப்பு பேச்சு.
சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று இந்து மதத்தின் மனு ஸ்மிருதி சொல்கிறது, சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை கொடுக்காதே, ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்ற வேண்டும் என்று சொல்கிறது இந்து மதம்.

தமிழ் தேசிய கோமாளி

இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் எதிர்த்து சூத்திரன் பட்டம் ஒழிய பாடுபட்டார்.
சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று சொன்ன மனு ஸ்மிருதி இந்துமதத்திற்கு எதிராக பேச வக்கில்லாமல் சூத்திரன் என்ற பட்டத்தை ஒழிக்க போராடிய பகுத்தறிவுப் பகலவன் மீது கொடிய நஞ்சை கொட்டிஉள்ளார் தமிழ்த்தேசிய பைத்தியகோமாளி.

நாட்டின் விடுதலைக்காக அனைத்து தலைவர்களும் போராடிய வேளையில் மனிதன் மானமும் அறிவும் பெறவேண்டும் என்று சிந்தித்து செயலில் இறங்கிய ஒரே தலைவர் தந்தை பெரியார்.

குருகுலத்தில் ஜாதிப் பாகுபாடுகள், வைக்கத்தில் மனிதர்கள் வீதியில் நடக்க தடையை உடைத்தது, வர்ணா சிரமத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது என்று அவரது சாதனை அளப்பரியது, வியப்புக்குரியது.
திருக்குறள் பற்றி மாநாடு,புத்தர் பற்றிய சிந்தனைகள், அம்பேத்கர் உடன் நட்பு, பகத்சிங் கருத்துகளை மக்களிடம் நூலாக வெளியிடப்பட்டது என்று சமுதாயத்தில் மக்களிடையே எழுச்சியை விதைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

சிந்தனைப் பரவல்

மனிதர்கள் சமமாக, சமத்துவமாக வாழவேண்டும் என்று தான் தந்தை பெரியார் அவர்கள் இறுதிவரை போராடினார். வெற்றியும் பெற்றார் இன்றுவரை வாழ்கிறார் கொள்கையாக – அவரது உடல் தான் மூச்சு நின்று விட்டது, ஆனால் அவரின் சிந்தனை எனும் காற்று எங்கும் பரவி உள்ளது.

தந்தை அவர்களிடம் இல்லாத சிறப்பு வேறு எவரிடமும் இல்லை, கேள்விக்கணைகள் தொடுத்தால் பதில்கள் உடனே வரும், அவரிடம் எந்த கேள்வியையும் கேட்க முடியாது ஏனென்றால் அவர் பதில்களின் உச்சம், சிந்தனைகளின் சிகரம். அவரிடம் கேள்வி கேட்டால் பதில் தெளிவாகி மீண்டும் கேள்வி கேட்க முடியாது அந்த அளவிற்கு அவரின் சிந்தனை செயல்பட்டது.

ஆதாரம் எதுவும் இல்லாமல் பேசியது இல்லை, கட்டுப்பாடு ஒன்று தான் அவர் கழகத்திற்கு காட்டிய வழி, அதனால் தான் அவர் என்றும் பேரொளி.

தந்தை பெரியார் அவர்கள் காட்டிய கட்டுப்பாடுகளை தான் திராவிடர் கழகம் இன்றளவும் ,இம்மியளவும் பிறழாமல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிநடத்தி வருகிறார்.

வழக்குகள் பதிவு

அய்யா அவர்கள் சொல்லாத கருத்தை சொன்னவுடன் தமிழ்நாடே ஒரு நிமிடம் அதிர்ந்தது, அய்யா மீது அவதூறு ஏசியவர் மீது அமைதியான வழியில் அவருக்கு பதில்கள், விளக்கங்கள் ஆரவாரமின்றி போர்க் களம் இல்லாமல் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், பைத்தியக்கோமாளி மீது வழக்குகள்.

இது தான் தந்தை பெரியார் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, பெரும்பான்மை இல்லாத சிறுபான்மையினர் எதிர்ப்பு மதவெறி.பாஜக கட்சி தவிர அனைத்து இயக்கங்களும் வெகுண்டு எழுந்தது.
காரணம் அனைவருக்குமானவர் தந்தை பெரியார் அவர்கள்,

அவர் முத்திரை அல்ல, முகமூடி அல்ல, தந்தை பெரியார் அவர்கள் மானிடத்தின் அடையாளம்,
தந்தை பெரியாரால் அழிந்தவர்கள் எவரும் இல்லை, அதனால் தான் இன்றும் அவர் மீது அளவற்ற எதிர்ப்பு ஏவுகணைகள்.

தந்தை பெரியாருக்கும், அவர் கொள்கைக்கும் என்றும் தோல்விகள் இல்லை.

சூத்திர, அடித்தட்டு மக்களின் கரம் ஏந்தலாக தந்தை பெரியார் அவர்கள் திகழ்ந்தார், அதனால் தான் இன்றும் அவர் வென்று வருகிறார்.

காலூன்ற முடியாது

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கூறியது போல தமிழ்நாட்டில் பாஜக ஒரு போதும் காலூன்ற முடியாது. அதற்கு பெரியார் மண் என்றும் போராடும், பெரியார் தான் வெல்வார், பெரியா ரிடம் மோதினால் அடையாளம் இழப்பது தான் மிச்சம்.

சூத்திர தமிழ் தேசிய பைத்தியங்களே உங்களுக்கு துணிவு இருந்தால் , சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று சொன்ன மனுதர்மத்தை எதிர்த்து களம் காணுங்கள்.

அய்யா மீதும், அய்யா கொள்கை மீதும் வன்மம் கொண்டால் உங்களுக்கு தான் பாதிப்பு.
அய்யா அவர்கள் மீது தவறான ஏவுகணைகளை எய்த போதும் அறவழியில் தோழர்களை அமைதிகாக்க செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், திராவிட சீர்மிகு ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் திராவிட இயக்க தோழர்களின் நன்றிகள்.

தந்தை பெரியார் வாழ்கிறார்
தந்தை பெரியார் வெல்கிறார்
தந்தை பெரியார் ஆள்கிறார்

அன்றும் இன்றும் என்றும் தந்தை பெரியார் அவர்களுக்கு வெற்றி ஒன்று தான்.
தந்தை பெரியார் அவர்கள் கொள்கை மேலும் வலுப்பெற, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கரம்பற்றி சிரம் தாழ்த்தி சிகரம் தொடுவோம் அய்யா கொள்கையை ஏந்தி.

வாழும் காலமெல்லாம்
தந்தை பெரியார் கொள்கை அறவழியில் நின்று வென்றெடுப்போம்.
இன உணர்வுடன்,

– மு.சு. அன்புமணி, மதுரை 625020

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *