அதிகாலை வேளையில்
மதுரையில் நுழைந்த
பேருந்தில்,
‘பெரியாரில் இறங்கறவங்க
தயாராக இருங்கள்’
என்று
எழுப்பினார் நடத்துநர்.
பெரியாரில் இறங்க வேண்டியவர்
எதற்கு தயாராக வேண்டும்..?
என்றது மனது.
எதற்கும்தான்
தயாராக வேண்டும்
என்றது அறிவு.
பெரியார் பேருந்து நிலையம்
வந்தது.
தயாராக இருந்த
பயணிகளை
நடத்துநர் அழைத்தார்..
‘பெரியார்லாம்
வாங்க’
என்று
பெரியாரில் இறங்கத்
தயாராக இருந்த
சிறியார்களும்
பெரியார்களாகவே
இறங்கினர்…
அவ்வேளை
மண்ணில் அந்தகார இருள்
அகலத் தொடங்கியது..
பகலவன் வீசிய
பளிச்செனும் ஒளியில்
எல்லாம்
ஒளிரத் தொடங்கியது..!