விவசாயிகள் குழு டில்லி நோக்கி பேரணி

1 Min Read

புதுடில்லி, ஜன.17 101 விவசாயிகளை கொண்ட குழு வருகிற 21-ஆம் தேதி பஞ்சாப் –- அரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் இருந்து டில்லி நோக்கி பேரணியைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைளை ஏற்க வேண் டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக இந்த பேரணியை தொடங்குகின்றனர். கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பந்தர் இதை தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில எல்லையான ஷம்பு உள்ளிட்ட பகுதிகளில் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு விவசாயிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த முன்வரவில்லை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *