ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் கிறுக்குத்தனம் அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்குத் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதியாம்!

viduthalai
1 Min Read

அமராவதி, ஜன.17 அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்குத்தான் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

இதுகுறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு யோசனை தெரி வித்துள்ளார்.இது தொடர் பாக முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

அதிக குழந்தைகள்

இணையர்களிடம் இப்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் குறைந்து வரு கிறது. இரண்டு குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்க்க அதிக பணம் தேவைப்படுகிறது என்ற எண்ணம் உருவாகியுள்ளது. உங்கள் பெற்றோர்கள் இப் படி நினைத்து இருந்தால், நீங்கள் பிறந்து இருக்க முடியுமா. அவர்கள் அதிக குழந்தைகளை பெற்று வளர்க்கவில்லையா. குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து வருகிறது. தென்கொரியா, ஜப்பான், அய்ரோப்பா நாடுகள் இதுபோன்ற மக்கள் தொகை வீழ்ச்சியை பெருமளவில் சந்தித்து வருகிறது. அந்த தவறை இந்தியாவும் செய்ய வேண்டாம்.

ஒரு காலத்தில் அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு உள் ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இப்போது அதை மாற்ற வேண்டும். அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்குத்தான் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். குழந்தை பிறப்பு அதிகரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக கொள்கையில் மாற்றம் கொண்டுவர இருக்கிறேன்.

குழந்தை பிறப்பு குறைந்து கொண்டே சென்றால் 2047-ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிக அளவில் முதியோர்களே இருப்பார்கள். இளை ஞர்களை பார்க்கவே முடியாது.எனவே, ஒவ்வொரு பெண்ணும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற் றால், மக்கள் தொகை அதிகரிக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *