சென்னை, ஜன.17- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிராக தி. மு.க. சட்டத்துறை சார்பில் சென்னையில் நாளை (18.1.2025) மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
3 ஆவது மாநில மாநாடு
சென்னை, ஜன.17- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிராக தி. மு.க. சட்டத்துறை சார்பில் சென்னையில் நாளை (18.1.2025) மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
3 ஆவது மாநில மாநாடு
தி.மு.க. சட்டத்துறையின் 3 ஆவது மாநில மாநாடு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நாளை நடைபெ றுகிறது.
இது குறித்து தி.மு.க. சட்டத் துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. சட்டத்துறை மாநாட்டு திடலில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சரும், தி.மு.க. தலை வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை தெளிவுப்படுத்தி தீர் மானங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம், ‘பெரியார் குறித்து பேசிய சீமான் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. சட்டத்துறை வலியுறுத்துமா?’ என்று செய்தியாளர்கள் கேட்ட தற்கு, ‘‘ஒருவர் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்படும் போது உரிய முடிவை காவல்துறைதான் எடுக்கும் காவல்துறை தலைமை இயக்குநர் ஒருமித்த முடிவை எடுப்பார். எனவே இந்த விவகா ரத்தை காவல்துறை பார்த்துக் கொள்ளும்’‘ என்று பதில் அளித்தார். பேட்டியின்போது தி.மு.க. சட்டத்துறை இணை செய லாளர்கள் கே.எஸ். ரவிச்சந்திரன், சூர்யா வெற்றிகொண்டான், துணை செயலாளர் மருது கணேஷ் உள்பட நிர்வாகிகள் உடனி ருந்தனர்..மு.க. சட்டத்துறையின் 3 ஆவது மாநில மாநாடு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நாளை நடைபெ றுகிறது.
இது குறித்து தி.மு.க. சட்டத் துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. சட்டத்துறை மாநாட்டு திடலில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சரும், தி.மு.க. தலை வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை தெளிவுப்படுத்தி தீர் மானங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம், ‘பெரியார் குறித்து பேசிய சீமான் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. சட்டத்துறை வலியுறுத்துமா?’ என்று செய்தியாளர்கள் கேட்ட தற்கு, ‘‘ஒருவர் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்படும் போது உரிய முடிவை காவல்துறைதான் எடுக்கும் காவல்துறை தலைமை இயக்குநர் ஒருமித்த முடிவை எடுப்பார். எனவே இந்த விவகா ரத்தை காவல்துறை பார்த்துக் கொள்ளும்’‘ என்று பதில் அளித்தார். பேட்டியின்போது தி.மு.க. சட்டத்துறை இணை செய லாளர்கள் கே.எஸ். ரவிச்சந்திரன், சூர்யா வெற்றிகொண்டான், துணை செயலாளர் மருது கணேஷ் உள்பட நிர்வாகிகள் உடனி ருந்தனர்.