பெரம்பலூர் ‘‘பெரியார் பேசுகிறார்’’ அய்ந்தாவது மாதாந்திர கூட்டம்!

1 Min Read

பெரம்பலூர், ஜன.16 பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் என்ற தலைப்பில் அய்ந்தாவது மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் துவக்கமாக மாவட்ட செயலாளர் விசயேந்திரன் வரவேற்பு ரையாற்றி, பின்னர் மாவட்டக் கழகம் அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூரில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை பெரியார் பேசுகிறார் என்ற தலைப்பில் மாதாந்திர கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் 11.01.2024 அன்று மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், மாவட்ட காப்பாளர் அக்ரி ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நடராசன் ஆகியோர்களின் முன்னிலையிலும் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் 5 ஆவது மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற தலைப்பில் ஒரு அர்ச்சகர் ஆவதற்கு என்னென்ன பயிற்சிகள் பெற வேண்டும் எனவும், ஒரு கோவில் எழுப்புவதற்கு ஆகம விதிகள் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்தும், அவ்வாறு தமிழ்நாட்டில் ஒரு கோவிலாவது ஆகம விதிகள் படி கோவில் கட்டி உள்ளார்களா? என கேள்வி எழுப்பி, சுட்டிக்காட்டி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் சிவசக்தி சிறப்புரையாற்றி னார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *