சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

1 Min Read

மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம்!

சென்னை, ஜன. 12- நடப்பாண்டின் முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் (10.1.2025) சட்டமன்ற 5ஆவது நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதில் அளித்தனர். .

உரிமை இல்லை

இந்த நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தப்போவது இல்லை. ஆகவே மாநில அரசு அதனை நடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கே அதிகாரம் உள்ளது. பீகாரில் மாநில அரசு ஆய்வு நடத்தினார்கள். அதன் நிலை என்ன ஆனது?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த
மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை

இருப்பினும் ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *