62 வழக்குகள் பதிவு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

viduthalai
1 Min Read

தந்தை பெரியார் குறித்து சீமான் பேசி யது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திராவிடர் கழகம் மற்றும் திமுக, தபெதிக உள்ளிட்ட கட்சியினர் அளித்துள்ள புகார்களின் பேரில், 11 மாவட்டங்களில் சீமான் மீது 62 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய் துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர். தந்தை பெரியார் குறித்து தெரிவித்த கருத்துகள் அனைத்துத் தரப்பினரின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகின.

இந்நிலையில், சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத் துறை இணை செயலாளர் மருதுகணேஷ் புகார் கொடுத்தார். இதேபோல, தமிழ்நாடு முழுவதும் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில், சென்னை உட்பட 11 மாவட் டங்களில் சீமான் மீது 62 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரை கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். “பெரியார் குறித்து சீமான் கூறிய கருத்துகள் அவதூறானவை. சமூக ஊடகங்களில் இது வேகமாக பரவுகின்றன. சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கோரி அண்ணா நகர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்ய வில்லை. எனது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் அவர் கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், “சீமான் தெரிவித்த கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளன. எனவே, மனுதாரரின் மனுவை பெற்று காவல்துறையினர் உரிய நடவ டிக்கை எடுத்து, நீதிமன்றத் தில் 20ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *