பெரியார் பாலிடெக்னிக் மாணவிகள் மண்டல விளையாட்டுப் போட்டியில் சாதனை

1 Min Read

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் புதுக்கோட்டை, சுப்ரமணியன் பாலிடெக்னிக் கல்லூரியில் 7.1.2025 மற்றும் 8.1.2025 ஆகிய நாட்களில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே மண்டல அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுக் கோப்பைகளை வென்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு பெருமையும் புகழும் பெற்றுத் தந்தனர். கையுந்து பந்து போட்டியில் முதலிடம், எறிபந்து போட்டியில் முதலிடம், வளைபந்து போட்டியில் இரண்டாமிடம், பூப்பந்து போட்டியில் இரண்டாமிடம், கபடி போட்டியில் இரண்டாமிடம், கோ-கோ போட்டியில் இரண்டாமிடம் ஆகிய பரிசுகளை வென்று விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் படைத்த மாணவிகளை இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *