நாகர்கோவில், ஜூலை 19 – குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டுவிழா, காம ராஜர் பிறந்த நாள்பொதுக்கூட்டம் கருங்கல் அருகேயுள்ள தொலையா வட்டம் சந்திப்பில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திராவிடர் கழக காப்பாளர் சி.கிருஷ்ணேஷ்வரி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் மா.மு. சுப் பிரமணியம் தொடக்கவுரையாற் றினார். பி.கோபால், பகுத்தறிவா ளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநில சொற்பொழி வாளர் இரா.பெரியார் செல்வம் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பெரியார் தாஸ், நாகர்கோவில் மாநகர செயலாளர் மு. இராஜசேகர் கழக மாவட்ட மகளிரணி தலைவர் ம.இந்திரா, மகளிர் பாசறை செயலாளர் கி. அன்பரசி ,மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், திருவட்டாறு ஒன்றிய அமைப் பாளர் டார்ஜன் தக்கலை ஒன்றிய செயலாளர் சி.இளங்கோ, அமைப்பு சாரா தொழிற் சங்க அமைப்பாளர் க.யுவான்ஸ், குருந்தன்கோடு அமைப்பாளர் செல்லையன் தோழர் கலைச்செல்வன், திமுக நிர்வாகிகள் தங்கதுரை, துரைராஜ், ஜெனோ மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.