நாகர்கோயிலில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

1 Min Read

அரசியல்

நாகர்கோவில், ஜூலை 19 –  குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக  வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டுவிழா, காம ராஜர் பிறந்த நாள்பொதுக்கூட்டம்  கருங்கல் அருகேயுள்ள தொலையா வட்டம் சந்திப்பில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு திராவிடர் கழக காப்பாளர் சி.கிருஷ்ணேஷ்வரி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

மாவட்ட தலைவர் மா.மு. சுப் பிரமணியம் தொடக்கவுரையாற் றினார். பி.கோபால், பகுத்தறிவா ளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநில சொற்பொழி வாளர் இரா.பெரியார் செல்வம் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பெரியார் தாஸ், நாகர்கோவில் மாநகர செயலாளர் மு. இராஜசேகர் கழக மாவட்ட மகளிரணி தலைவர் ம.இந்திரா, மகளிர் பாசறை செயலாளர் கி. அன்பரசி ,மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், திருவட்டாறு ஒன்றிய அமைப் பாளர் டார்ஜன் தக்கலை ஒன்றிய செயலாளர் சி.இளங்கோ, அமைப்பு சாரா தொழிற் சங்க அமைப்பாளர் க.யுவான்ஸ், குருந்தன்கோடு அமைப்பாளர் செல்லையன் தோழர் கலைச்செல்வன், திமுக நிர்வாகிகள் தங்கதுரை, துரைராஜ், ஜெனோ மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *