ஜூன் வரை ஆதார் இணையவழி இலவச புதுப்பிப்பு வசதி நீட்டிப்பு

1 Min Read

புதுடில்லி, ஜன. 9 ஆதார் அட்டையில் தகவல்களை இணைய வழியாக கட்டணமின்றி புதுப்பிக்கும் வசதியை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆதாா் அட்டையில் பொதுமக்கள் தங்களின் பெயா், முகவரி மற்றும் பிற அடிப்படை தகவல்களை அதிகாரபூா்வ ‘மைஆதாா்’ இணையதளம் மூலம் கட்டணமின்றி புதுப்பித்துக் கொள்ளும் வசதி கடந்த டிசம்பா் 14-ஆம் தேதிவரை நடைமுறையில் இருந்தது. இந்த வசதியை வரும் ஜூன் 14-ஆம் தேதிவரை நீட்டித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஅய்டிஏஅய்) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

இதன்மூலம், பொதுமக்கள் ஆதாா் அட்டையில் தங்களின் சரியான தகவல்களை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கு போதிய அவகாசம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14-ஆம் தேதிவரை மைஆதாா் இணையதளம் மூலம் ஆதாா் அட்டையைக் கட்டணமின்றி புதுப்பித்துக்கொள்ளலாம். அதேநேரம், ஆதாா் மய்யங்களில் புதுப்பிப்புகளுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். ஜூன் 14-ஆம் தேதிக்குப் பிறகு, மைஆதாா் இணையதளத்திலும் புதுப்பிப்புகளுக்கு ரூ.25 கட்டணம் பொருந்தும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *