நுழைவுத் தேர்வு பயிற்சி மய்யங்களா? மாணவர்களின் கல்லறைகளா?

1 Min Read

கோட்டா, ஜன.9 ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மய்யங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாண வர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோட்டா நகரில் தங்கியிருந்து ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த 20 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவரின் பெயர் அபிஷேக் என்பதும், அவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இவர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் கோட்டா நகரில் உள்ள ஒரு பயிற்சி மய்யத்தில் சேர்ந்து ஜே.இ.இ. தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். இது கோட்டா நகரில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 2-ஆவது தற்கொலை சம்பவமாகும். முன்னதாக அரியானாவை சேர்ந்த நீரஜ் என்ற 19 வயது மாணவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவரும் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *