வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காத 34 ஆயிரம் பேரின் ஓய்வூதியம் நிறுத்தம்

1 Min Read

சென்னை,ஜன.9- மின் வாரியத்தில் வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத 34 ஆயிரம் ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

ஓய்வூதியம்

தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் அல்லது குடும்ப ஓய்வூதியதாரா்கள் அல்லது கருணை ஓய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழை ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பா் வரை சமா்ப்பித்து புதுப்பிப்பது வழக்கம். அந்தவகையில் நிகழாண்டில் ஓய்வூதியா்கள் தங்களுக்கான வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பித்து புதுப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தில் உள்ள 92,000 ஓய்வூதியதாரா்களில் 2024 ஜூலை முதல் டிசம்பா் வரையில் 58,000 ஓய்வூதியதாரா்கள் மட்டுமே 2024ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பித்து புதுப்பித்துள்ளனா்.

மீதமுள்ள 34 ஆயிரம் ஓய்வூதியதாரா்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்க வில்லை என தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.

இதனால் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்காத ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதியம் ஜனவரி முதல் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *