டாக்டர் மன்மோகன்சிங், ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைப்பு

1 Min Read

சென்னை, ஜன.7 சட்டமன்றத்தில் இன்று (7.1.2025) மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மேனாள் ஒன்றிய இணை அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடர் நேற்று (6.1.2025) காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை படித்ததும் நேற்றைய கூட்டம் முடிந்தது.

மீண்டும் இன்று (7.1.2025) காலை 9.30 மணியளவில் சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், சட்டமன்றப் பேரவை மேனாள் உறுப்பினர் ஆர். தமிழ்மொழி ராஜதத்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து இந்திய மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அவரின் சிறந்த பணிகள் குறித்து இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவர் மு. அப்பாவு படித்தார். பின்னர் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

அதே போன்று சட்டமன்ற பேரவை உறுப்பினரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சருமான ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பை படித்ததும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணி துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து அவை நிகழ்வு முடிந்ததாக பேரவை தலைவர் மு. அப்பாவு அறிவித்தார். மீண்டும் பேரவை நாளை (8.1.2025) காலை கூடும் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *