கழகத் தலைவர் இரங்கல்

1 Min Read

 சிங்கப்பூர் திராவிடர் கழக மேனாள் தலைவர் நடராசன் அவர்களின்

துணைவியார் திருமதி அன்னபூரணி அம்மாள் மறைவு

அரசியல்

1967-களில் சிங்கப்பூர் திராவிடர் கழகத்தின் (சிங்கப்பூர் நாட்டு அரசால் பதிவு செய்யப்பட்ட அமைப்பு அப்போது) தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றிய பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நடராசன் அவர்களது துணை வியார் திருமதி அன்னபூரணி நடராசன் (வயது 89) அவர்கள் நேற்றிரவு  (19.7.2023) சிங்கப் பூரில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

1967இல் நான் முதன் முதலில் சிங்கப்பூர் சென்றபோது வரவேற்று, நிகழ்ச்சிகளை ஒருங்கமைத்து – அன்றைய திராவிடர் கழக முக்கிய தோழர்களான சு.தெ. மூர்த்தி, நாகரத்தினம், முருகு சீனுவாசன், இராமச்சந்திரன் மற்றும் தோழர்களுடன் சிறப்பாக செயல்பட்ட பண்பாளர் திரு. நடராசனார். அவரது துணைவியாரும் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஆவார்.

மீண்டும் சில ஆண்டுகள் கழித்து நான் சிங்கப்பூருக்குச் சென்ற போது நடந்த பெரியார் விழாவில் திருமதி அன்னபூரணி அம்மாளை அழைத்து வெகுவாகப் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டது.

மறைவுச் செய்தியை கேட்டவுடன், அவரது மருமகன் நண்பர் ராஜகண்ணு அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் கூறினோம்.

அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் உரித்தாக்குகிறோம்.

 கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

20-7-2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *