செய்தித் துளிகள்

2 Min Read

சிறைத் துறை அதிகாரிகளுக்கு
உள்துறை அமைச்சகம் உத்தரவு

சிறையில் கைதிகளுக்குள் இடையே ஜாதி ரீதியான பாகுபாடு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிறைத்துறை டி.ஜி. அய்.ஜி.களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரில் நில நடுக்கம்

மணிப்பூரில் சுராசந்த்பூர் பகுதியில் நேற்று மதியம் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.35 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மய்யம் தெரிவித்துள்ளது.

128 ரயில்கள் வேகம் அதிகரிப்பு

தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் ரயில் தண்டவாளத்தை மேம்படுத்தியதன் மூலமாக 128 வரைவு மற்றும் அதிவிரைவு ரயில், பயணிகள் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில்களின் பயண நேரம் குறைந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுக்கு
தலைமைச் செயலாளர் உத்தரவு

நீதிமன்றங்களில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் பிரமாண பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்களில் அரசு வழக்குரைஞர்களிடம் சான்றொப்பம் பெறுவது கட்டாயம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் என். முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.77 லட்சம் கோடி

ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, 2024 டிசம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாயாக 1.77 லட்சம் கோடி ரூபாய் வந்துள்ளது. இது முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.3 சதவீதம் அதிகம்.
உரத்தின் விலை உயர்வை

தடுக்க நடவடிக்கை

டை – அம்மோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி.) உரத்தின் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில், விவசாயிகள் 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையை ரூ.1,350க்கு தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதற்காக ரூ.3,850 கோடிக்கு சிறப்பு தொகுப்பு நிதியை வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
வெப்ப நிலை அதிகரிக்கும்

வானிலை ஆய்வு மய்யம்

இந்த ஆண்டில் வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளிலும், தென் தீப கற்பத்தின் மத்திய பகுதிகளிலும் அதிகபட்ச வெப்ப நிலையானது இயல்பான அளவைவிட அதிகமாகவே இருக்குமென்று இந்தியவானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *