224 வழக்குகளில் பறிமுதல் செய்த மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிப்பு

1 Min Read

சென்னை, டிச.29 சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பதிவான 224 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு காவல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த காலங்களை காட்டிலும் தற்போது போதைப்பொருள்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனா்.
பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருள்கள், நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்கப்படுகிறது. இதன்படி, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 224 வழக்குகளில், காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 3,421 கிலோ கஞ்சாவை, செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் (ஆபத்தான ரசாயன பொருள்கள், மருத்துவக் கழிவுகள் அழிக்கும்) களத்தில் சுமாா் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் தமிழ்நாடு காவல்துறையினர் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் எரிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *