சரியான நேரம் + சரியான உணவு = சிறந்த உடல் நலம்

1 Min Read

மின்சார விளக்குகள் வராத காலத்தில், இரவு உணவை மாலையிலேயே உண்டுவிட்டு உறங்கச் செல்லும் வழக்கம் இருந்தது.
இன்றும் கூட சிலர், சூரியன் மறைந்த பின்னர் சாப்பிட மாட்டார்கள்; அதை ஒரு பழக்கமாகவே பின்பற்றி வருகின்றனர். இது, உடலுக்கு நல்லது என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.

அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பியா பல்கலை. அதிக உடல் பருமன் கொண்ட, 50 – 70 வயதுக்கு உட்பட்ட 26 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியது.

இவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இரு குழுவுக்கும் ஒரே கலோரி அளவுள்ள உணவு, வெவ்வேறு நேரங்களில் கொடுக்கப்பட்டது.
அதாவது, அன்றாட கலோரி தேவையில் 45 சதவீதத்தை, குழு ‘ஏ’வுக்கு மாலை 5:00 மணிக்கு முன்னரும், குழு ‘பி’க்கு மாலை 5:00 மணிக்கு பின்னரும் தந்தனர். இரு குழுவினரின் ரத்த சர்க்கரை அளவு, இதயச் செயல்பாட்டை பரிசோதித்தனர்.

குழு ‘ஏ’வைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியமாக இருப்பதும், குழு ‘பி’யைச் சேர்ந்தவர்களின் ஆரோக்கியம் கெட்டிருப்பதும் தெரிய வந்தது.இந்த ஆய்வின் மூலம், நம் உணவின் பெரும்பகுதியை அதாவது அன்றாட கலோரி தேவையில் 45 சதவீதத்தை, மாலை 5:00 மணிக்குள் எடுத்துக் கொள்வது ஆரோக்கியம் தரும் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *