சென்னை, டிச.21- சளி, வைட்டமின் குறைபாடு, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாசலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன.
அதன் விவரங்கள் ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விவரங்களை, அந்த இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதேநேரம் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
28.71 கோடியாக அதிகரிப்பு
அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
சென்னை, டிச.21- தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா்
ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தார்
இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பிரத்யேக கொள்கை வெளியிடப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்களிப்பை 12 சதவீதமாக உயா்த்துவதல், சுற்றுலா மற்றும் அதைச் சாா்ந்துள்ள தொழில்களில் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணி
கரோனா நோய்த்தொற்று காலத்தில் உலகளவில் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த வீழ்ச்சியில் இருந்து மீள கடுமையான முயற்சிகளை உலக நாடுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன.
இதனிடையே, முதலமைச்சரின் செயல்பாடுகளால் தமிழ்நாடு சுற்றுலாத் துறை புத்துயிா் பெற்று வருகிறது. 2020-ஆம் ஆண்டு 14.18 கோடியாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 2023-ஆம் ஆண்டில் 28.71 கோடியாக உயா்த்தி அரசு சாதனை படைத்திருக்கிறது. மேலும், பலகோடி சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த
அலைபேசி சாமிக்கே சொந்தமாம்!
திருப்பிக் கொடுக்க மறுப்பு
சென்னை, டிச.21- சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்றார். பின்னர் தினேஷ் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அப்போது காணிக்கை பணத்தை உண்டியல் உள்ளே போடும்போது தன்னுடைய அலைபேசியையும் தவறுதலாக உண்டியலின் உள்ளே போட்டுவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உண்டியலை திறந்து தனது அலைபேசியை தருமாறு கோவில் ஊழியர்களிடம் கேட்டார். ஆனால் அதற்கு அவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளை தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். அதன் பின்னர் தினேஷ் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் சென்று புகார் அளித்துள்ளார். அவர்கள் திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் திறக்கப்படும் போது தகவல் கூறுவோம் என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (20.12.2024) திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இது குறித்து தினேஷுக்கும் தகவல் அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அலைபேசியை வாங்கும் ஆர்வத்தில் வந்த தினேஷிடம் கோயில் நிர்வாகத்தினர் உண்டியலில் விழுந்த அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது எனக் கூறி அலைபேசியை கொடுக்கவில்லை. மேலும் தினேஷிடம் இந்த அலைபேசியில் உள்ள முக்கியமான தரவுகளை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
இதனால் தினேஷ் எழுத்துப்பூர்வமாக இதனை எழுதிக் கொடுத்துவிட்டு அலைபேசியில் உள்ள சிம் கார்டு மற்றும் மெமரி கார்டுகளை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். உண்டியலில் உள்ள காணிக்கை பணத்துடன் அலைபேசி கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.