திருவாரூர், டிச. 19- பெரியார் கொள்கையாளரும், புலிவலம் காமராஜர் படிப்பகத்தின் தலைவராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் புகழை போற்றும் வகையில் திருவாரூர்-விஜயபுரம் வர்த்தகர் சங்க மண்டபத்தில் 15.12.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்து கொண்டு அவரது படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
நினைவேந்தல் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கியது. திருவாரூர் நகர தலைவர் கே.சிவராமன், ரோட்டரி மாவட்ட மேனாள் உதவி ஆளுநர் எஸ்.ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சி.முருகானந்தம், கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் சு.சிங்காரவேல், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் ஆ.ச.குணசேகரன், வேளுடையார் கல்வி குழுமத்தின் தாளாளர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி, புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, மாநில விவசாய அணி துணைத் தலைவர் இரா.சங்கர், தலைமை கழக அமைப்பாளர் வீ.மோகன், வர்த்தகர் சங்க பொறுப்பாளர் எஸ்.வி.டி.கனகராஜன், நகர இந்திய தேசிய காங்கிரஸ் வி.கே.எஸ்.அருள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆரூர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், திருவாரூர் தி.மு.க. ஒன்றிய செயலாளாரும், ஒன்றிய பெருந் தலைவருமான புலிவலம் ஆ.தேவா, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தி.மு.க.மேனாள் அமைச்சரும் தாட்கோ தலைவருமான உ.மதிவாணன் ஆகியோர் வாழ்நாள் முழுவதும் அந்த பகுதியில் அவர் ஆற்றிய சமுதாய தொண்டினை நினைவுகூர்ந்து அனைத்து இயக்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்களும், பற்றாளர்களும் குறிப்பிட்டு நினைவேந்தல் உரையாற்றினார்கள்.
கழகத் துணைத் தலைவர்
கழகத் துணைத் தலைவர் நினைவேந்தல் உரையில், பெரியார் தொண்டர் என்றால் மறைந்தும் மற்றவர்களுக்கு பயன்படக்கூடியவர்கள் எப்படி என்றால், அவர் மறைந்தாலும் அவர் இருக்கும் போது தன்னுடைய உடலை மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கான ஒப்புதலை தன்னுடைய குடும்பத்தினரிடம் எழுதி கொடுத்துவிட்டார். அவர் கூறியதை போலவே குடும்பத்தினர் அவர் விருப்பப்படி அனைத்தையும் செய்து அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளனர்.
புலிவலத்தில் இந்த குடும்பம் பாரம்பரியமிக்க இயக்க குடும்பமாகும். இந்த பகுதி மக்களுக்காக பல்வேறு சமூகப் பணிகளையும், கல்விப் பணிகளையும் செய்து வரக்கூடிய குடும்பம் என்றும், எஸ்.எஸ்.மணியம், கிருஷ்ணமூர்த்தி, அருண்காந்தி, மருத்துவர் மேகநாதன், சுந்தரேசன், ஜெயசுதன் என்று அடுத்தடுத்த தலைமுறையினரும் இதே கொள்கையில் களப்பணி ஆற்றி வருகிறார்கள் என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
கலந்துகொண்டோர்
நிகழ்ச்சியில் அம்மையார் கி.அமிர்த கவுரி, திருவாரூர் மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் சவு.சுரேஷ், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மன்னார்குடி மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், நாகை மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், திருவாரூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ஈ.வெ.ரா. ஆசிரியர் முனியாண்டி, திராவிடர் விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர், வீர.கோவிந்தராஜ், கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார், கழகச் சொற்பொழிவாளர்கள் இரா.அன்பழகன், கோ.செந்தமிழ்செல்வி, தே.நர்மதா, சட்டக்கல்லூரி மாணவர் மு.இளமாறன், இராசலெட்சுமி மணியம், அன்புகீதா சுகுமார், சாந்தி அருண்காந்தி, அருள்மணி ஜெயசுதன், ஆதன் மணியம் உள்ளிட்ட குடும்பத்தினர், கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தனர்.
வருகை தந்த அனைவருக்கும் அவருடைய மகன் கி.அருண்காந்தி நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை முடித்துவைத்தார்.