அய்யப்பன் காப்பாற்றவில்லையே! சபரிமலை சன்னிதானத்தில் அய்யப்ப பக்தர் மரணம்

1 Min Read

திருவனந்தபுரம், டிச.18 சபரிமலை கோயிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சபரி மலைக்கு செல்வார்கள். இதற்காக தேவசம் போர்டு தரப்பில் பல் வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (17.12.2024) சபரிமலை அய்யப்பன் கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் ஒருவர் கீழே விழுந்தார். உடனடியாக மீட்ட சக பக்தர்கள் அவரை சன்னிதானத் தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து முதல் உதவி அளித்தனர். காவலர்கள் நடத்திய விசாரணையில் கீழே விழுந்த நபர் கர்நாடக மாநிலம் கனகபுராவைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. கீழே விழுந்த குமாருக்கு கைகள் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் கோட்டயத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *