பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 35 ஆண்டுகளாக எலக்ட்டிரிசியனாக பணியாற்றி வந்த எ.அந்தோணி (வயது 56 ) அவர்கள் நேற்று (17.12.2024) இரவு 11.30 மணியளவில் மறைவுற்றார். திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்த அவ்வைமணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கூடுதல் பதிவாளர் மற்றும் பணியாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
– – – – –
கடலூர் பெரியார் படிப்பக நூலகர் பெரியார் பெருந்தொண்டர் தி. மாதவன் (வயது 67) உடல் நலக் குறைவு காரணமாக 17.12.2024 மாலை 3:50 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம் இறுதி நிகழ்வு 18.12.2024 மதியம் 1 மணிக்கு 15 மீனாட்சி நகர் ஆனைக்குப்பம் கடலூர் 1 அவர் இல்லத்தில் இருந்து மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு உடல் கொடை வழங்கப்பட்டது. முன்னதாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் கழகத் தொண்டர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.