நோயாளிகளுக்கு சிறப்பு பயிற்சி மய்யம்

1 Min Read

பெரியகுளம், கைலாசபட்டியில் இயங்கி வரும் ராம்ஜி அறக்கட்டளையின் மாற்றுதிறனாளர்கள் மறுவாழ்வு இல்லத்தில் பக்கவாதம், முதுகு தண்டுவட பாதிப்பு, தசை தளர்வு நோய் உள்ள நோயாளிகளுக்கு சிறப்பு பயிற்சி மய்யம் அமைந்துள்ளது தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வாக அங்கே சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் ஆசிரியர் பிறந்த நாளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள 8.12.2024 அன்று கழகத் தோழர்கள் இனிப்பு காரம் பிஸ்கட்டுகள் வழங்கி மகிழ்தனர். நிகழ்வில் தேனி மாவட்ட கழகத் துணைத் தலைவர் ஸ்டார்.சா.நாகராசன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ஸ்டார்.நா.ஜீவா, சமூக சேவகர் கோடீஸ்வரன் ராம்ஜி அறக்கட்டளை நிறுவனர் வெங்கட் பூபதி மற்றும் பாத அழுத்த சிகிச்சை மரு. திருமலைச்சாமி உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *