தமிழ்நாட்டில் 1.54 லட்சம் குடும்பங்களுக்கு புதிய உணவுப் பங்கீட்டு அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித் துள்ளது. விண்ணப்ப தாரர்களின் விவரங்களை ‘இ-கவர்னஸ்’ எனப்படும் மின் ஆளுமை முகமை சரிபார்த்து உணவு வழங்கல் துறைக்கு ஒப்புதல் அளித்து வருகிறது. அதன்படி, கடந்த 4 மாதங்களில் பெறப்பட்ட 2.84 லட்சம் புதிய உணவுப் பங்கீட்டு அட்டைகளுக்கான விண்ணப்பங்களில் 1.54 லட்சம் பயனாளிகளுக்கு உணவுப் பங்கீட்டு அட்டை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.