உலகின் மிகப்பெரிய காற்றாலையை நிறுவி சீன நாடு சாதனை செய்துள்ளது. டோங்பாங் (Dongfang) எனும் நிறுவனத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின்சார உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு சீனா. அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்காவும், ஜெர்மனியும் உள்ளன. அதிகரித்து வரும் தன்னுடைய மின் தேவைகளை, சுற்றுச்சூழலைப் பெரிய அளவு பாதிக்காத வகையில் ஈடு செய்வதற்குச் சீனா முயன்று வருகிறது. புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த பூசவ் என்னும் இடத்தில் இது நிறுவப்பட்டுள்ளது. இதன் மொத்த உயரம் 1,115 அடி. அதாவது, இது பாரிஸ் ஈபிள் கோபுரத்தை விட உயரமானது. இது எளிதில் துருப்பிடிக்காத படி அமைக்கப்பட்டுள்ளது. 17 சூறாவளிகள் வந்தாலும் கூட இது தாக்குப் பிடிக்கும். அந்தளவுக்கு வலுவானது என்று இதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் காற்றாலை மணிக்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகின்ற காற்றில் இருந்து 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
இது 55,000 வீடுகளுக்குப் போதுமானது. இந்த ஒரு காற்றாலை 30,000 டன் நிலக்கரி பயன்பாட்டையும், 80,000 டன் கரியமில வாயு உமிழ்வை யும் குறைக்கும்.