பள்ளி மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டின் தீமை குறித்த கட்டுரைப் போட்டி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

viduthalai
2 Min Read

சென்னை, நவ.29- தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி விளையாட்டு தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காக கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் மீதான இணையவழி விளையாட்டுகளின் தாக்கங்கள் என்ன? இணையவழி விளையாட்டுக்கும் மைதானத்தில் விளையாடும் விளை யாட்டுக்குமான வித்தியாசங்கள் ஆகிய கருத்துகள் வெளியாகும் தலைப்பில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் தமிழ், ஆங்கிலத்தில் கட்டுரை எழுத வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.6 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.4 ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது.

நாகை, கடலூரில் இருந்து இலங்கைக்கு
சரக்கு கப்பல் போக்குவரத்து

நாகை, நவ.29 நாகை, கடலூர் துறைமுகங்களில் இருந்து மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு, தற்போது 150 பயணிகளுடன் வாரத்துக்கு 5 நாட்களுக்கு இருவழிகளிலும் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.தொடர்ந்து, மாலத்தீவுகள், இலங்கை யாழ்ப்பாணம், கொழும்பு, காங்கேசன்துறை உள்ளிட்ட இடங்களுக்கு கடலூர், நாகை துறைமுகங்களில் இருந்து சரக்குகளைக் கையாள தமிழ்நாடு கடல்சார் வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இலங்கைக்கு வேளாண் பொருட்கள், மீன்சார் பொருட்கள் மற்றும் இதர நுகர்வுப் பொருட்கள் என ஆண்டுக்கு 75,000 டன் சரக்குகளைக் கையாளவும், வரும் ஆண்டுகளில் இது பன்மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பது தெரியவருகிறது.

சிறிய அளவிலான பாய்மரக் கப் பல்கள், மிதவைகளைக் கையாள்வதற்குத் தேவையான கட்டமைப்புகள் மற்றும் சுங்கம், குடிவரவு, சுகாதாரத் துறை ஆகிய அனைத்து அனுமதிகளுடன் கடலூர் மற்றும் நாகை துறைமுகங்கள் தயாராக உள்ளன. இந்த வசதிகளை சரக்கு இறக்குமதி-ஏற்றுமதியாளர்கள், முகவர்கள் மற்றும் மரக்கல மிதவை உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொண்டு, சரக்கு இறக்குமதி- ஏற்றுமதி செய்து, குறைந்த செலவில் திருப்திகரமான சேவைகளை பெற்றுப் பயன்பெறலாம். இதன் மூலம் அவர்களுக்கு வருவாய் பெருகக்கூடும்.இந்த துறைமுகங்களின் வாயிலாக சரக்கு இறக்குமதி- ஏற்றுமதி செய்வது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு துறைமுக அலுவலர்களை கடலூர்- 94422 43225, நாகை- 94425 59978 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என நாகை ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *