கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.11.2024

1 Min Read

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* சலுகை பெறுவதற்கு மதம் மாறுவது மிகப்பெரிய மோசடி: ஒருவர் தான் சார்ந்த மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், இடஒதுக்கீடு பலன்களை பெறுவதற்கு மதம் மாறுவது என்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் சமூகத்தின் ஒட்டுமொத்த நோக்கங்களையும் சிதைக்கிறது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு மசோதாவை டிசம்பர் மாதத்தில் சட்டபேரவையில் தாக்கல் செய்ய தெலங்கானா அரசு முடிவு.
* வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி இன்று (28.11.2024) மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றார்.
* மணிப்பூர் பிரச்சினை தொடர்பான பேச்சு வார்த்தையின் போது, ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கினால், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம் – மெய்தி குழுவினர் திட்டவட்டம்.
*பங்களாதேசத்தின் தேசிய கொடியை அவமதித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட இஸ்கான் அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ணதாஸ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இஸ்கான் அமைப்பு ஓர் அடிப்படைவாத அமைப்பு என அந்நாட்டு அரசு அறிவிப்பு.
* அதானி விவகாரத்தில் இரண்டாம் நாளும் நாடாளுமன்ற இரு அவைகளும் அமளி காரணமாக ஒத்திவைப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிரா முதலமைச்சராக பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு. இருப்பினும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் செய்தது போல் வேறு சில பெயர்களும் எதிர்பாராத நிலையில் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்.
* பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தை திமுக நிராகரித்தது, கைவினைஞர்களை உள்ளடக்கிய திட்டத்தை தமிழ்நாடு அரசே உருவாக்கும் என ஒன்றிய அரசுக்கு கடிதம்.
தி இந்து:
* இஸ்கானை தடை செய்ய வங்கதேச நீதிமன்றத்தில் மனு

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *