சுயமரியாதைச் சுடரொளி அரங்க. ரவியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்: தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

Viduthalai
1 Min Read

கிருட்டிணகிரி, நவ.16 கடந்த 3.11.2024 அன்று கிருட்டிணகிரி மேனாள் மாவட்ட துணைத் தலைவரும் மத்தூர் கலை புகைப்பட நிலையம் உரிமையாளருமான சுயமரியாதைச் சுடரொளி அரங்க. ரவியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மத்தூர் பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை அருகில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மத்தூர் ஒன்றிய கழகத் தலைவர் கி.முருகேசன் தலைமையில் நடை பெற்றது.

நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், கழக மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம் மாவட்ட தொழி லாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.சிலம்பரசன், ஒன்றிய இளைஞரணி தலைவர் சா.அரசுகுமார், ஒன்றிய கழகத் துணைத் தலைவர் சா. தனஜெயன், ஒன்றிய கழகப் பொறுப்பாளர் பொன்.விஸ்வநாதன், இரா.பழனி, மாவட்ட மருத்துவ மாணவர் கழகப் பொறுப்பாளர் இ.ச.அகரன், ‘பெரியார் பிஞ்சு’ கா.ஆ.நிறைதமிழ் மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *